எங்கு உள்ளது தெரியுமா!? தஞ்சை பெரிய கோயிலில் உள்ளது! ஆம்!
இராசராசர் உயிருடன் இருந்த போதே தனது மகன் இராசேந்திர சோழரை இணையரசராக்கி தன்னுடன் ஆட்சி செய்ய வைத்தார். இராசேந்திரரின் 3 ஆம் ஆட்சியாண்டு வரை இராசராசரின் 29 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள் கிடைக்கின்றன! இவை நாம் அறிந்ததே!
இராசேந்திரரின் முதல் கல்வெட்டு நான் முன்னவே சொன்னது போல தஞ்சை பெரிய கோயிலில் உள்ளது. சண்டிகேஸ்வரர் சன்னதியின் சுவற்றில் காணப்படும் இராசேந்திரரின் இரண்டாம் ஆட்சியாண்டு கல்வெட்டே இவரின் முதல் தமிழ் கல்வெட்டாகும்!