சேத்தியாதோப்பு பாலத்தை எடுப்பித்த அன்றைய ஆங்கிலேய அரசின் சாலை துறை அதிகாரி கார்பரல் டி பிரவுன் என்பவர் 1854 ஏப்ரல் 25 ஆம் நாள் தனது 52 ஆவது வயதில் இறந்ததால் அவரின் நினைவாக ஒரு நினைவு தூபியை அதே சேத்தியாதோப்பு சாலையில் எடுத்துள்ளனர்! இந்த நினைவு சின்னம் உள்ளூர் ஆட்கள் பலர் கண்டிருக்க மாட்டார்கள். பல காலம் இதை சுற்றி கடைகள் இருந்தன. இப்போது கடைகள் இல்லாமல் வெளியே தெரிகிறது!
வீராணம் ஏரி அருகே உள்ள ஊர் சேத்தியாதோப்பு, சிதம்பரத்திற்கு மேற்கே உள்ளது